பேரணாம்பட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்!

பேரணாம்பட்டு பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்!
X
பேரணாம்பட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேரணாம்பட்டு நகரம் மற்றும், பாலூர், ஓம்குப்பம், கொத்தூர், குண்டலப்பல்லி, சாத்கர், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்திரப்பல்லி, பல்லாலகுப்பம், அரவட்லா உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என குடியாத்தம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வி.எம்.வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.
Next Story