ஷாட்ஸ்

அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!!

அரக்கோணம் அருகே கார், டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காரில் பயணம் செய்த வெங்கடேசன் அவரது மனைவி லதா. தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன், மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்!!

மாநிலங்களின் இறப்புப் பதிவுகளை சேகரித்து அதில் மரணமடைந்த 1.20 கோடி பேரின் ஆதார் எண்கள் முடக்கம்; முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினரே இறப்புச் சான்று மூலம் அவர்களின் ஆதாரை முடக்க விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவிட்டுள்ளார். பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்ததில் ஆதார், ரேஷன் அட்டையை ஆவணமாக ஏற்க: திமுக மனு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கும்போது ஆதார், ரேஷன் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது. தேர்தல் தொடர்பான விதிகளை இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுவதை போல தமிழிழும் வழங்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் நிலை குறித்த சூழலையும் சரி செய்ய வேண்டும்.

கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா சொல்லிவிட்டார்: அண்ணாமலை

கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார். இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். என் கட்சித் தலைவர் அமித்ஷா ‘கூட்டணி ஆட்சி’ என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? என கூறினார்.

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து!!

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திமுகவை எதிர்ப்பவர்கள் இன்னும் கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. திமுக தலைமையில் ஒரு கூட்டணி வலுவாக உள்ளது; திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக்கிடக்கின்றன. தேர்தல் தொடர்பான விதிகளை இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுவதை போல தமிழிழும் வழங்க வேண்டும். தேசிய அளவில் இணைந்து செயல்பட வேண்டிய தேவை குறித்து கமல்ஹாசனிடம் பேசினேன் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.

அண்ணா பல்கலை. தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பல்கலை. தற்காலிக பேராசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பேராசிரியர்கள், பணியாளர்களை குத்தகை முறையில் நியமிப்பதை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது!!

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது. ஓரணியில் தமிழ்நாடு, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒடிசாவில் பாலியல் வன்கொடுமையால் மாணவி தீக்குளித்து உயிரிழப்பு!!

ஒடிசாவில் கல்லூரி உதவி பேராசிரியர் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தீக்குளித்து உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் தலைமையில் அம்மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9,105க்கு விற்பனை. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றிமின்றி கிராம் ரூ.124க்கு விற்பனையாகிறது.

மகளிர் மாநாடு அழைப்பிதழ்: அன்புமணி படம் தவிர்ப்பு!!

பாமக, வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் . 10ல் நடக்கும் மகளிர் மாநாடு அழைப்பிதழில் அன்புமணி படம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாமக மகளிர் மாநில மாநாடு அழைப்பிதழில் ராமதாஸ், கலசம் சின்னம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் மேலும் ஒருவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார்காட்டைச் சேர்ந்த 59 வயது நபர் நிஃபா வைரஸால் இறந்த நிலையில் அவரது மகனுக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளா – தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

திருவள்ளுவரை அவமதிக்கும் மன்னிக்க முடியாத செயல் :ப.சிதம்பரம்

காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். போலிச் சித்திரம், போலிக் குறள், இந்தப் போக்கு எங்கு கொண்டு செல்லும்? என்று ஆளுநர் அளித்த விருதில் திருக்குறள் சர்ச்சையானது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

கூட்டணி ஆட்சி என அமித்ஷா சொல்லவில்லை: இபிஎஸ்

'கூட்டணி ஆட்சி' என்று அமித் ஷா சொல்லவேவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தான் அவர் சொல்லி இருக்கிறார். கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. நாங்கள் எடுப்பதே முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மனிதனுக்கு உயிர், விவசாயிக்கு நீர் முக்கியம்: இபிஎஸ்

ஒரு மனிதனுக்கு உயிர் எப்படி முக்கியமோ அப்படி விவசாயிகளுக்கு நீர் முக்கியம். ஆன்லைன் நெல் கொள்முதலில் நீடிக்கும் பிரச்சினை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்க்கப்படும் என சிதரம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை: திமுக

தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்ததில்லை இனிமேலும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என திமுக செய்தி தொடர்பாளர் டி கே இளங்கோவன் திட்டவட்டம். தேர்தல் நேரத்தில் அமர்ந்து பேச வேண்டிய விஷயம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தாலும் வரலாம் என்றுதான் கூறினேன். அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அதன்பிறகு ஆட்சியில் பங்கு குறித்து கேளுங்கள். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அன்புமணி கேள்விக்கு நேரடியாக பதில் தர எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி கூறியிருந்தார்.

சென்னையில் ஏடிஎமில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் ரூ.50 லட்சம் கையாடல்!!

சென்னையில் ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவன ஊழியர் ரூ.50 லட்சம் கையாடல் செய்துள்ளார். பணம் நிரப்பச் செல்லும் ஊழியர் சங்கர் மீது பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அடுத்து தலைமறைவான சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல்!!

கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,845 கன அடியாக சரிவு!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,760 கன அடியில் இருந்து 17,845 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.66 அடி; நீர் இருப்பு 92.93 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம்.