- Home
- /
- ஷாட்ஸ்

குழந்தைகள் நல மையங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை இல்லாமல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அனுமதி அளித்துள்ளது. 843 குழந்தைகள் நல மையங்களில் தங்கியுள்ள 15,092 குழந்தைகள் பயன் பெறுவர்.

ஊட்டி, கொடைக்கானலில் விடுதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் மூவர் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தங்கும் விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கன்றனவா என்பது குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

உதகை, கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு அளித்துள்ளது. கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்ற அவசியம் வந்தால் மேலும் 500 வாகனங்களை அனுமதிக்கலாம். உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த ஐகோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அரசு வழக்கில் நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், பாத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவு அளித்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யாத குற்றம் சாட்டப்பட்ட இருவரை நீதிமன்ற காவலில் வைக்க ஆணை பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜரானார். குற்றப்பத்திரிகையுடன் ஆவணங்களை காகித வடிவில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு வழங்க EDக்கு உத்தரவு அளித்துள்ளது.

வக்ஃபு சட்டத்திருத்தம் என்பது ஒழுங்குமுறைப்படுத்த மட்டுமே; மத உரிமைகளை பாதிக்காது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. “அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறவில்லை. அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரங்களை வக்ஃபு சட்டம் மீறவில்லை. வக்ஃபு சட்டத்திருத்தம் என்பது வாரியத்துக்கான சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பானது. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வர்த்தக தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.8 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிந்து 79,213 புள்ளிகளானது. நண்பகலில் 1195 புள்ளிகள் வீழ்ச்சியுள்ள சென்செக்ஸ் இறுதியில் மீட்சி பெற்று 589 புள்ளிகளில் சரிந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவையில் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், பாமக, விசிக, தவக, மமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. கலைஞர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறையற்றினார். அதில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக கலைஞர் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்றால் அது கலைஞர் போட்ட விதை என்று கூறினார். மேலும் பேசிய ஜி.கே.மணி, எளிய மக்களின் துயர் துடைத்தவர் கலைஞர், பல்கலை.க்கு அவரது பெயரை வைக்க வேண்டும், என்றார்.