சித்தையன் கோட்டை புதுப்பள்ளிவாசலில் நிகாஹ் கவுன்சில் நிகழ்ச்சி

சித்தையன் கோட்டை புதுப்பள்ளிவாசலில் நிகாஹ் கவுன்சில் நிகழ்ச்சி

இறைவன் கிருபையால் சித்தையன் கோட்டை ஜன்னதுல் ஃபிர்தௌஸ் புதுப்பள்ளிவாசல் மற்றும் மதரஸா மதீனதுல் உலூம் இஸ்லாமிக் சென்டர் இனைந்து நடத்திய நிகாஹ் கவுன்சில் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பமாக திருகுர்ஆன் ஓதி துவங்கப்பட்டது மௌலவி அப்துல் ஜலீல் தாவூதி வரவேற்புரை நிகழ்த்தினார் புதுப்பள்ளிவாசல் இமாம் மௌலவி சேக் முஹம்மது தாவூதி துவக்க உரை நிகழ்த்தினார்கள் புதுப்பள்ளிவாசல் முத்தவல்லி நன்றியுரை நிகழ்த்தினார். ஆண்களுக்கு மௌலவி முஸ்தபா ஹஸனி ஹஜ்ரத் அவர்கள் நிகாஹ் கவுன்சில் வகுப்பை சிறப்பாக நடத்தி தந்தார்கள் அதே போல் பெண்களுக்கு வந்திருந்த ஆலீமா சிறப்பாக நடத்தி தந்தார்கள். இந்த வகுப்பில் ஆண்கள் 40 க்கும் அதிகமானவர்களும், பெண்கள் 50 க்கும் அதிகமானவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு விருந்தளிக்கப் பட்டது

நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் இது போன்ற நிகழ்வுகளை நமது பகுதியில் சென்டர் அமைத்து திருமணம் முடிக்கப்போகும் புதிய ஜோடிகளுக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் குறைந்த பட்சம் வருடத்திற்கு இரண்டு முறையாவது நடத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்

Tags

Next Story