சாமியாரை கொலை செய்து புதைத்த 4 பேர் கைது!

சாமியாரை கொலை செய்து புதைத்த 4 பேர் கைது!
X

வேலூர் மத்திய சிறை 

காட்பாடி அருகே சாமியாரை கொலை செய்து புதைத்த நான்கு பேரை மேல்பாடி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் மதுரையைச் சேர்ந்த சன்னியாசி ( சாமியார்) ரவி என்பவர் குடிசை கட்டி வசித்து வந்துள்ளார். இவர் மணல் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்பாடுகள் குறித்து போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்ததாகவும், சமூகவிரோதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவியை கொலை செய்து புதைக்கப்பட்டு விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

இந்த தகவல் காட்டு தீ போல சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசப்பட்ட நிலையில் மேல்பாடி போலீசார் விசாரணையை தொடங்கினர் . சந்தேகத்தின் பேரில் ஹரி கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரை பிடித்து போலீசார் கிடக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சாமியார் ரவியை அடித்து கொலை செய்து வள்ளிமலை பகுதியில் புதைத்ததாகவும், ஹரி கிருஷ்ணனின் செல்போன் காணாமல் போனதால் ரவி திருடி இருக்கலாம் என நினைத்து தாக்கிய போது இறந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் அதே இடத்தில் உடலை புதைத்தனர். மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பிடிபட்ட நான்கு பேர் மற்றும் தலைமறைவாக உள்ள திருமலை என 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைதானவர்களை சிறையில் அடைத்து விட்டு, தலைமறைவாக உள்ளவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story