நாவில் சுவை ஊறும் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி !!

நாவில் சுவை ஊறும் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி !!
X

 தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தேவையான பொருட்கள்.;-

நெய் 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் தேவைக்கேற்ப

பாசுமதி அரிசி - 2 கப்

வெங்காயம் பெரியது 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் 3

இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் 1டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி

புதினா 1 கைப்பிடி

கெட்டியான தேங்காய் பால் 1 கப்

தண்ணீர் 2 கப்

உப்பு தேவைக்கேற்ப


பிரியாணி மசாலா பொடிக்கு தேவையான பொருட்கள்.:-

சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை - 3

ஏலக்காய் - 6

அன்னாசிப்பூ - 2

கிராம்பு - 6

ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள் :

சிக்கன் - ஒரு கிலோ

கெட்டியான புளிக்காத தயிர் - 1 கப்

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை;

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும், பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கனை போட்டு, கெட்டியான தயிர், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சோம்பு, பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு பாசுமதி அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள சிக்கனை அதனுடன் போட்டு 5 நிமிடம் நன்கு கிளறி, சிக்கனில் மசாலா சேரும் வரை பிரட்டி விட்டு15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும், பின்னர் குக்கரில் வாணலியில் வேக வைத்த சிக்கனை எடுத்து போட்டு கொள்ள வேண்டும். தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி தயார்.

Tags

Next Story