எச்ஐவி எய்ட்ஸ் குறித்து ஆட்டோ ரிக்க்ஷா விழிப்புணர்வு பேரணி

எச்ஐவி எய்ட்ஸ் குறித்து ஆட்டோ ரிக்க்ஷா விழிப்புணர்வு பேரணி
X

ச்ஐவி எய்ட்ஸ் குறித்து ஆட்டோ ரிக்க்ஷா விழிப்புணர்வு பேரணி

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்ஐவி எய்ட்ஸ் குறித்து ஆட்டோ ரிக்க்ஷா விழிப்புணர்வு பேரணி: எம்எல் ஏ தொடங்கி வைத்தார்.




மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து ஆட்டோ ரிக்க்ஷா விழிப்புணர்வு பேரணி‌ நடைபெற்றது இந்த பேரணியை திருத்தணி எம்எல்ஏ எஸ் சந்திரன் தொடங்கி வைத்தார். திருத்தணி பைபாஸ் சாலையில் தொடங்கிய இந்த பேரணி சித்தூர் சாலை, ம.பொ.சி சாலை , பஜார் வீதி வழியாக சென்று கமலா திரையரங்கத்தில் நிறைவு பெற்றது. பேரணியின் போது எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து எம்எல்ஏ எஸ் சந்திரன் தலைமையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர் பேரணியில் திருத்தணி டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story