யு.பி.ஐ.யில் தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிப்பு!!

யு.பி.ஐ.யில் தினசரி பணம் அனுப்பும் உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிப்பு!!
X

UPI 

யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், தனிநபரிடம் இருந்து வணிகருக்கான பி 2 எம் பரிவர்த்தனைக்கு மட்டுமே இது பொருந்தும், பி 2 பி எனப்படும் தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சம் ரூபாயாகவே நீடிக்கும் என தெரிவித்துள்ளது. இதற்காக நுகர்வோர் எந்த ஒரு அப்டேட்டும் மேற்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் தொடர்பு கொள்ளும் வணிகர்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், உயர்த்தப்பட்டுள்ள வரம்பின் கீழ் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

* காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவு, மூலதன சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

* கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ.6 லட்சமாகவும், கடன் மாதத் தவணைகள், சுற்றுலா, இஎம்ஐ உள்ளிட்டவற்றிக்கு பணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே பரிவர்த்தனையில் ரூ.5 லட்சமும், 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சமும் பணம் செலுத்தலாம்.

* நகைகளை வாங்குவதற்கு ஒரே நேரத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சம் பரிவர்த்தனை செய்யலாம்.

* வங்கியில் டிபாசிட் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம்.

* தனிநபர்களுக்குள் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு ஒரு லட்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story