அகதிகளுக்கு மம்தாவின் ஆதரவு - வங்கதேச அரசு ஆட்சேபனை

அகதிகளுக்கு மம்தாவின் ஆதரவு - வங்கதேச அரசு ஆட்சேபனை
X

மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தின் கதவுகளைத் தட்டும் வங்கதேச அகதிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு வங்கதேச அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் இந்த அறிவிப்பை தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது எக்ஸ் பத்தில் மம்தா வெளியிட்டிருந்த பதிவில், “வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியர்கள் மேற்கு வங்கம், இந்தியாவுக்கு திரும்புகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் உதவிகளைச் செய்யுமாறு எங்கள் மாநில நிர்வாகத்தினை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். நாங்கள் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிற வசதிகளை வழங்கினோம். ஒற்றுமையாக நிற்போம்” என்று தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்புக்கு இந்திய தூதரகத்தில் வங்கதேச அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையான கருத்துகள் குறிப்பாக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படும் போன்ற பேச்சுகளை தீவிரவாதிகள் மற்றும் தவறான நபர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்துள்ளதாகத் தெரிகிற்து.

Tags

Next Story