தமிழக முதல்வருக்கு ராகுல் காந்தி போட்ட அசத்தல் ட்வீட் !

தமிழக முதல்வருக்கு ராகுல் காந்தி போட்ட அசத்தல் ட்வீட் !
X

காங்கிரஸ் எம்பி மூத்த தலைவர் ராகுல் காந்தி செய்த போஸ்ட் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த போஸ்ட் காரணமாக பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படாது என்றாலும் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு, அந்த கட்சிகளை சார்ந்து கருத்துக்களை சொன்ன அரசியல் விமர்சகர்களுக்கு இந்த போஸ்ட் பெரிய செக் மேட்டாக வைக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணத்தின் ஒரு கட்டமாக சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கடற்கரையில் சைக்கிள் ஓட்டினார். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டிய வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

சிகாகோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை, "மாலை நேர அமைதி, புதிய கனவுகளுக்கு வித்திடும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது. தமிழ் நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து தமிழ்நாட்டில் இதேபோல் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, "சகோதரரே.. சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்" என கேட்டிருந்தார். அன்புள்ள சகோதரர் ராகுல் காந்தி உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னை வாருங்கள், நம் இருவரும் ஒன்றாக சவாரி செய்து சென்னையின் இதயத்தை ஆராய்வோம்.. நான் உங்களுக்கு தர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் இன்னும் நிலுவையில் உள்ளது. நாம் சைக்கிள் சவாரி செய்த பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை சுவைப்போம்" என பதிலுக்கு கூறி உள்ளார்.

Tags

Next Story