மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காததை கண்டித்தும் தமிழக விரோத போக்கை கண்டித்தும் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பாசிச பாஜக ஆட்சியை கண்டித்தும் தமிழகத்திற்கு நிதி வழங்காத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்தும் 2019 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துவிட்டு இதுவரை ஒரு பைசா கூட க்காக ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சர்வேயர் செல்வகுமார் கூறும் போது மைனாரிட்டி பாஜக அரசு தமிழக விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறது இதனை கண்டித்து தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடந்த 2019 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துவிட்டு இதுவரை ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை வெள்ளத்தால் தமிழகம் பலத்த சேதம் அடைந்தது அப்போது 37 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு ஒன்றிய அரசிடம் கேட்டு இருந்தது அதில் 276 கோடி ரூபாய் மட்டும் வழங்கிவிட்டு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை வாரி வழங்குகிறது ஆனால் தமிழக அரசை மட்டும் வஞ்சிக்கிறது இதனை கண்டித்து தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது உரிய நிதியை வழங்காவிட்டால் சாலை மறியல் ரயில் மறியல் என போராட்டம் விரிவு படுத்தப்படும் என கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்
Next Story