வங்கியில் உள்ள பணம் பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..

வங்கியில் உள்ள பணம் பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..
X
விழிப்புணர்வு
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி குழுவினரால் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வங்கி சேவை மற்றும் வங்கி குறைதீர்ப்பு திட்டம் 2001 படி நடைமுறையில் உள்ள வாடிக்கையாளர் சேவை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. குறிப்பாக தற்போது உள்ள டிஜிட்டல் முறையில் பலவற்றில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர் அதில் இருந்து எவ்வாறு வாடிக்கையாளர் பாதுகாப்பாக இருப்பது அதேபோல் சிலர் ஏமாற்றப்படும்போது யாரிடத்தில் புகார் தெரிவிப்பது புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதபோது இந்திய ரிசர்வ் வங்கியின் PMS ஆஃப்பில் மூலம் புகார் தெரிவிக்கும் முறைகள் குறித்து தெளிவாக வீடியோ மூலம் விளக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் வங்கி மேலாளர்கள், வங்கி தொடர்பாளர்கள், வங்கி வாடிக்கையாளர் என பலர் கலந்துக் கொண்டனர்..
Next Story