சோளிங்கர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டத்தில் கைது.

சோளிங்கர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டத்தில் கைது.
X
கைது
சோளிங்கர் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டத்தில் கைது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐயப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன் (23). இவர்கள் இருவரும் கொலை குற்றவாளிகள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரையும் கொலை குற்ற வழக்கு ஒன்றில், சோளிங்கர் வட்ட காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, மேற்குறிப்பிட்ட இருவரையம் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்
Next Story