மர்ம நபர் குப்பைக்கு தீ வைப்பு புகை மண்டலமாக மாறிய சாலை

மர்ம நபர் குப்பைக்கு தீ வைப்பு புகை மண்டலமாக மாறிய சாலை
X
புகை
வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு கரும்புொகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளதால் மாணவிகள் உட்பட பலர் அவதி ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு காகிதக்காரத்தெரு பகுதியில் பின்புறமாக இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெளியே குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது இந்த நிலையில் குப்பைகளை அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு தான் கொட்டி வருகின்றனர் இதன் காரணமாக இன்று கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.. இதனால் குப்பையில் இருந்து தீ மலமலவென உருவாகி அப்பகுதி வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து பள்ளியில் உள்ளே இருக்கும் மாணவிகள் மற்றும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மூச்சுத்திணறல் சுவாச கோளாறு கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே இதன் மீது நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை கொட்டாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story