நண்பனை தாக்கிய ராணுவ வீரர் கைது!

நண்பனை தாக்கிய ராணுவ வீரர் கைது!
X
குடியாத்தம் அருகே மது வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் நண்பனை தாக்கிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடியாத்தம் கஸ்பா கவுதமபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது 40), குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் கறிவேப்பிலை வியாபாரம் செய்து வருகிறார். குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சீனிவாசன் (27), ராணுவவீரர். விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். சோமுவும், சீனிவாசனும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில் வெள்ளிக்கிழமை சீனிவாசனை போனில் தொடர்பு கொண்ட சோமு தனக்கு மது வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதன்படி சீனிவாசன் குடியாதத்துக்கு சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். மீண்டும் இரவு போன் செய்து மது வாங்கிக்கொடுக்குமாறு கூறி உள்ளார். அதன்படி சீனிவாசன் குடியாத்தம் வந்து மது வாங்க ஒருவரை அனுப்பி உள்ளார். மது வாங்கிவர தாமதமானதால் சீனிவாசனின் செல்போன் மற்றும் பர்சை எடுத்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், சோமுவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சோமு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், ராணுவ வீரர் சீனிவாசனை கைது செய்தனர்.
Next Story