தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிப்பு
X
வேலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் அப்துல்லாபுரத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு தொழிற் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வருகிற 16-ந் தேதி வரை சேர்க்கைக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story