ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை - விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை - விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
X
மழை
ராணிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் பரவலாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டித்தீர்த்த மிதமான மழை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை முதல் தாக்கம் குறைவாக காணப்பட்டு மாலையில் வானில் கருமேகங்கள் சூழப்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவி காணப்பட்டதால் வாலாஜாபேட்டை, முத்துக்கடை, நவல்பூர், மாந்தாங்கல், சிப்காட், ஆற்காடு, ராணிப்பேட்டை, மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரவலாக மிதமான மழை கொட்டி தீர்த்தது.
Next Story