புலிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில சாலை பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

புலிப்பாக்கம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில சாலை பணி நடைபெறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனூர் சுங்கச்சாவடி முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரை சாலையின் 2 மார்க்கத்திலும் பல்வேறு பகுதிகளில் சாலை மிகவும் மோசமான நிலையிலும் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர் எனவே இந்த சாலையை மறுசீரமைத்து புதிய சாலை அமைக்க கோரி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அந்த வகையில் தற்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் அருகே நடைபெறும் சாலை பணியின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்கள் பரனுர் சுங்கச்சாவடியில் இருந்து புலிப்பாக்கம் வரை எதிர் திசையில் திருப்பி விடப்பட்டுள்ளது இதன் காரணமாக புலிப்பாக்கம் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. எனவே இதுபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஒட்டிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.. அதேபோல மாற்று வழியில் வாகனங்களை இயக்க போலீசார் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story