ஆடுதுறை குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

ஆடுதுறை குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.
X
ஆடுதுறை குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.
ஆடுதுறை குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறையில் உள்ள குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300 மாணவ மாணவிகளுக்கும், ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 36 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 336 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைப்பெருந்தலைவர் அண்ணாதுரை, ஆடுதுறை பேரூர் செயலாளர் கோ.சி.இளங்கோவன், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், உள்ளாட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story