ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்

ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்
விருதுநகரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் - 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மதுரை ரோட்டில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில், கடந்த 1 -4 -2003 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதே மேல் கடந்த 2022 டிசம்பர் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும், மேலும் ஓய்வு பெறும் போது தங்களை வெறும் கையோடு தமிழக அரசுகளை அனுப்பக்கூடாது, ஓய்வூதியர்களுக்கு 108 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும் ,பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கேற்ற வேலை வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஓய்வு மெற்றோர் நல சங்கம் சார்பாக 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரையில் அமர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை ஊரகக் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்
Next Story