தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்புவைப்பது குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்புவைப்பது குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -
X
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்புவைப்பது குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்புவைப்பது குறித்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல் தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 6 குழுக்கள்அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 01-01-2024 முதல் 17-08-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் குழுவாக இணைந்து 538 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களில் 1094 கிலோ 851 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களுக்கும் ரூ.60,60,000/-( ரூபாய் அறுபது இலட்சத்து அறுபது ஆயிரம் )அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18-08-2024 முதல் 24-08-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 18 குழு ஆய்வுகளில் 5 கடைகள் மற்றும் 3 வாகனத்தில் 20 கிலோ 125 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 5 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 5 கடைகள் மற்றும் 3 வாகனத்திற்கு ரூ.2,00,000/-(ரூபாய் இரண்டு இலட்சம்)அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரைகடை மூடி சீல் வைக்கப்படும், 3-வது முறையும் தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story