கிராம உதவியாளரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை
X
Sivagangai King 24x7 |3 Sept 2024 4:52 AM GMT
சிவகங்கை அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய தகராறில் கிராம உதவியாளரை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு சிவகங்கை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது
சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் அருகே ஆலங்கோட்டை கண்மாய் பகுதியில் அங்காளன்கோட்டையைச் சேர்ந்த விவசாயி கணேசன்(51) ஆக்கிரமிப்பு செய்திருந்தார். அந்த ஆக்கிரமிப்புகளை 2019 செப்.30- தேதி காலையில் கிராம நிர்வாக அலுவலருடன் சேர்ந்து திருவேகம்பத்தூர் கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் அகற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன், அன்று மாலை இருசக்கர வாகனத்தில் சருகனிக்குச் சென்ற ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கணேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜே நடராஜன் தீர்ப்பளித்தார். Reply
Next Story