வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி உடைத்த போது வெடித்து ஒருவர் காயம்

வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி உடைத்த போது வெடித்து ஒருவர் காயம்
X
ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் லாஞ்சர் சுடும் தளத்தில் உதிரிபாகங்களை பொறுக்கி விற்பனை செய்து வரும் நிலையில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி உடைத்த போது வெடித்து ஒருவர் காயம் மருத்துவமனையில் அனுமதி
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ஆர்பிஎப் சி ஆர் பி எப் உள்ளிட்ட மத்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் இந்த அனுமந்தபுரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் என இலக்குகளை நோக்கி சுட்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் இதில் 100 மீட்டர் 200 மீட்டர் 300 மீட்டர் 500 மீட்டர் வரை துப்பாக்கி மற்றும் எஸ் எல் ஆர் ஆகிய துப்பாக்கியால் சுடுதலமும் இயங்கி வருகிறது இதில் இரண்டு கிலோ மீட்டரில் இருந்து சுடும் ராக்கெட் லாஞ்சர்கள் மலையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க வேண்டும் இப்படி தாக்கி அதனுடைய அலுமினியம் பித்தளை போன்ற உதிரி பாகங்கள் சிதறி கிடக்கும் இவற்றிற்கு நல்ல கிராக்கி உள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் அவற்றை துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகு பொறுக்கிச் செல்கின்றனர் இதேபோல் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு கையறிக்கொண்டு போன்றவற்றிற்கு பிளைன்ட் பாம் என்று அழைக்கப்படுகிறது அவற்றை இப்பகுதியில் உள்ளவர்கள் கைப்பற்றி தங்களது முயற்சியில் உடைத்து அதையும் காசாக்கி வருகின்றனர் இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ராக்கெட் லாஞ்சர் கொண்டு செல்லும்போது அது கீழே விழுந்து வெடித்ததில் அப்பகுதியில் உள்ள மூதாட்டி உள்ளிட்ட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர் இதற்கு ஏற்றார் போல் அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் வயது 52 என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்துச் சென்று தான் வைத்திருந்த கத்தியால் உடைத்த போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது அப்போது கோதண்டன் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து மறைமலைநகர் காவல் துறையிடம் விசாரணை மேற்கொண்ட போது இது ராணுவத்திற்கு சொந்தமான பொருள் இதை யாரும் எடுத்துச் சொல்லவோ அல்லது பொறுக்கிச் செல்லவா கூடாது அப்படி செய்தால் தேசிய வெடிமருந்து சட்டத்திற்கு அவர்கள் கைது செய்யப்படலாம் ஆனால் இப்பகுதியில் உள்ள மக்கள் அறியாமையின் காரணமாக இதை எடுத்துச் செல்வதாலும் இதை வைத்திருக்கக் கூடாது என்று தெரியாததால் இதுபோன்ற விபத்துக்கள் நேரிடுவதாக ராணுவ தரப்பிலிருந்தும் காவல்துறை தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்படுகிறது இதுகுறித்து யாரும் புகார் அளிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
Next Story