தண்டலம் ஊராட்சியில் இலவச மருத்துவமனை புதிய கட்டிடத்தின் திறப்பு விழா

தண்டலம் ஊராட்சியில் பொதுமக்கள் நலனுக்காக இலவச மருத்துவமனை புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வெகு விமர்சனையாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் தனியார் நிறுவனத்தின் மூலம் 30 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் நலனுக்காக இலவச மருத்துவமனை கட்டித்தர வேண்டும் என்று அதிமுக தண்டலம் ஊராட்சி மன்ற தலைவரும் இளைஞர் அணி ஒன்றிய செயலாளருமான தண்டலம் எம் ஆனந்தன், தனியார் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார், அந்த கோரிக்கையை ஏற்று 30 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டித் தர ஒப்புக்கொண்டனர் அதனை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டினர் இந்த நிலையில் அந்த கட்டிடம் முடிவடைந்து அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது, இந்த விழாவில் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி இந்த புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர், இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்,
Next Story