ராசிபுரம் ரயில்வே பாலம் அடியில் ஆண் ஒருவர் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு.

ராசிபுரம் ரயில்வே பாலம் அடியில் ஆண் ஒருவர்  தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு.
X
ராசிபுரம் ரயில்வே பாலம் அடியில் ஆண் ஒருவர் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அப்சல் உசேன், 55. இவர், ராசிபுரம் - சேலம் செல்லும் சாலை, ரயில்வே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சிறிய வேப்ப மரத்தில் தூக்கிட்டவாறு சடலமாக இருந்தார். அப்பகுதிக்கு சென்றவர்கள், இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொலையா? என, விசாரித்து வருகின்றனர். இந்த ரயில்வே பாலத்தின் அடிப்பகுதிக்கு சென்று பலரும் மது அருந்துகின்றனர். சில நேரங்களில் போதை தலைக்கு ஏறி, என்ன செய்கிறார்கள் என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே, பாலத்தின் அடிப்பகுதியில் மது அருந்துபவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
Next Story