ராமநாதபுரம் சிபிஎஸ் ஒளிபியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக ஒற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் விஜயகுமார் தலைமையில் வகித்தார். சீனி முகமது மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி எண் 39 ன்படி சி. பி. எஸ் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த கோரியும் சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரியும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story