பாழடைந்த கிணற்றில் காலாவதி மருந்துகள்,பொதுமக்கள் அச்சம்

மதுராந்தகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலையோர பாழடைந்த கிணற்றில் காலாவதி மருந்துகள்,பொதுமக்கள் அச்சம்
மதுராந்தகம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலையோர பாழடைந்த கிணற்றில் காலாவதி மருந்துகள் பொதுமக்கள் அச்சம். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் என்ற பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பக்கவாட்டில் உள்ள பாழடைந்த கிணற்றில் காலாவதியான மாத்திரை மருந்து டானிக் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கிணற்றில் கொட்டி சென்றுள்ளனர். மேலும் அங்கு உள்ள குடியிருப்பு வாசிகள் துர்நாற்றம் வீசுவதை கண்டு பாழடைந்த கிணற்றில் உள்ள காலாவதி மருந்துகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலாவதியான மருந்துகளை கொட்டிச் சென்ற மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story