மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
X
கலெக்டர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிட வேலைவாய்ப்பு முகாம்கள் (ம) தொழில் பயிற்சிகளுக்கான பயனாளிகள் தேர்வு நடத்திட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டு மையம் (ம) மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகம் ஆகியவைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. திருச்சிராப்பள்ளியில் 06.09.2024 அன்று கலையரங்கம் திருமண மண்டபம் ,15டி மெக் டொனால்டு ரோடு, கண்டோன்மெண்ட் நடைபெற உள்ள முகாமில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெரம்பலுர் மாவட்டத்திலுள்ள வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள் (http://forms.gle/kcwsT2kngt3q7QLy7) என்ற வலைதள விண்ணப்பம் வாயிலாக பதிவு செய்தோ (அ) உரிய ஆவணங்களாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை , ஆதார் அட்டை, கல்விசான்று ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு புகைப்படம், பணிஅனுபவ சான்று மற்றும் தன் விவர குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளிலும் நேரில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்த்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண். 04328-225474 என்ற எண்ணில் தொடரலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
Next Story