வ உ சிதம்பரனார் பிறந்தநாள் விழா

வ உ சிதம்பரனார் பிறந்தநாள் விழா
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியும், கப்பலோட்டிய தமிழன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் வ.உ. சிதம்பரனாரின் 153 வது பிறந்தநாளை ஒட்டி திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வ.உ.சி யின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை. நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்* மேலும் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது 137 வது பிறந்த தினமான இன்று அறிவூட்டி, நெறிகாட்டி, ஒழுக்கம் காட்டி வளர்த்த ஆசிரிய பெருமக்களுக்கு, நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்வதாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தெரிவித்தார். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து இந்தியாவுக்காக பாடுபட்ட வ.உ. சிதம்பரனாரின் புகழை போற்றும் வகையில் இன்று ஒரு பிறந்த நாளை நாம் சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறோம். இந்தியா இவர் போன்ற தியாகிகளின் உழைப்பால் உருவானது என்பதை நாம் மறந்து விடக்கூடாது என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
Next Story