பள்ளி அளவிலான கலைத் திருவிழா

பள்ளி அளவிலான கலைத் திருவிழா
X
பள்ளி அளவிலான கலைத் திருவிழா
திருச்செங்கோடு ஒன்றியம் புனித அந்தோணியார் தொடக்கபபள்ளியில் ஆசிரியர் தின விழா, அன்னை தெரசா நினைவு தினம் மற்றும் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் மேற்பார்வையாளர் பொறுப்பு கா.சந்திரசேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சி பிளவேந்திரன் தலைமையில் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒன்று மற்றும் இரண்டு வகுப்புகளுக்கு ஒரு குழுவாகவும் மற்றும் மூன்று நான்கு ஐந்து ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு குழுவாகவும் போட்டிகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் இரண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.
Next Story