திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது
பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.... பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில், பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, திமுக பெரம்பலூர் ஒன்றிய அவைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார் கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே .என். அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் திமுகவில் அதிகப்படியான வாக்களித்து கே என் அருள் நேருவை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து வாக்களித்த அனைத்து நபர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர், தொடர்ந்து பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட திமுக கிளைக் கழக நிர்வாகிகளிடம் திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த மாவட்ட அவை தலைவர் நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாஸ்கர், நூருல்ஹித இஸ்மாயில், சம்பத், ரவிச்சந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வல்லவன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால், பெரம்பலூர் ஒன்றிய பொறுப்பாளர் கலையரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story