ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலைத் திருவிழா

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலைத் திருவிழா
X
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலைத் திருவிழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2024-2025 கல்வி ஆண்டிற்கான கலைத்திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி. திருக்குறள் ஒப்புவித்தல்.மாறுவேடம். மெல்லிசைப்பாடல்.தேசப்பக்திப்பாடல்கள்.வண்ணம் தீட்டுதல்.களிமண் பொம்மை செய்தல். குழு நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை சி.பி.சாந்தி. உதவி ஆசிரியைகள் ராதாமணி.ஜாஸ்மின்.ஜெயந்தி. மற்றும் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் பிரியங்கா,துணைத்தலைவர் திவ்யா,சமூக ஆர்வலர் வஜ்ரவேலு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் மற்றும் கலை வல்லுனர் ஆகியோர் நடுவர்களாக இருந்து பள்ளி அளவில் மாணவ மாணவியர்களை தேர்வு செய்து சிறப்பித்தனர்‌
Next Story