அரசு பள்ளி மாணவர் மாநிலளவிலான பேச்சுப்போட்டிக்கு தேர்வு...

அரசு  பள்ளி மாணவர் மாநிலளவிலான பேச்சுப்போட்டிக்கு தேர்வு...
X
சங்ககிரி: அரசு ஆண்கள் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் மாநிலளவிலான பேச்சுப்போட்டிக்கு தேர்வு...
சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி 9ம்வகுப்பு மாணவன் சேலத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநிலளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சென்னைராமலிங்கர் பணி மன்றம் இணைந்து நடத்திய பொள்ளாச்சி அருட்செல்வர் டாக்டர் நா.மாகலிங்கம் கலை இலக்கியப்போட்டியில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவன் சங்கமேஸ்வரன் சேலம் மண்டல அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் மாநிலளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.ஜெகநாதன் பாராட்டுச்சான்றிதழ், பரிசுத்தொகை ரூ.5 ஆயிரத்தை வழங்கிப் பேசினார். பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமயாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story