மது போதையில் மீன் கடையில் வேலை செய்த நபரை கத்தியால் குத்தியவர் கைது...

மது போதையில் மீன் கடையில் வேலை செய்த நபரை  கத்தியால் குத்தியவர் கைது...
X
சங்ககிரி:மது போதையில் மீன் கடையில் வேலை செய்தவரை கத்தியால் குத்தியவர் கைது...
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமத்தில் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மீன்கடையில் வேலை செய்தவரை மது போதையில் கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். எடப்பாடி வட்டம், தங்காயூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மாதப்பன் மகன் ராஜ்குமார் (36). அவர் விடுமுறையில் சங்ககிரியை அடுத்த ஐவேலி கிராமத்தில் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அவரது நண்பர் மீன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். வழக்கம்போல் மீன் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது மீன் கடையில் மது போதையில் வந்த நபர் தகராறு செய்துள்ளார். மது போதையில் தகராறு செய்தவர் சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்தை வழிமறித்துள்ளார். அதனை கண்ட அவர் மது போதையில் இருந்த நபரை சாலையில் ஓரமாக கொண்டு வந்து வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த நபர் ராஜ்குமாரை கத்தியால் குத்தியுள்ளார். காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மது போதையில் தகராறு செய்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கேரளமாநிலம், புதூர், குண்கதாரா, கள்ளும்மூட்டில் வீடு பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டன் மகன் ஜெயச்சந்திரனை (42) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story