பேட்டரி திருடன் கைது

பேட்டரி திருடன் கைது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் இருந்து தொடர்ந்து பேட்டரிகள் திருடு நிலையில் எலிமேட்டைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஊரகப் போலீசார் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்உத்தரவின் பேரில் திருச்செங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் குமாரமங்கலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருசக்கர வாகனத்தில் பேட்டரிகளை வைத்துக்கொண்டுவந்தஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் ராசிபுரம் சிங்களாந்தபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது என்பதும் தொடர் பேட்டரி திருட்டில் அவர் ஈடுபட்டு வந்ததும்விசாரணையில் தெரிய வந்தது. காணாமல் போன நாலு பேட்டரி களையும் திருடியதாக சாகுல் ஹமீது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார்.நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் சாகுல் அமீது சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story