இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
X
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதியில்இலவச வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒசுவாங்காடு காலனி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்று நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் தொடர்ந்து மனு வழங்கிய நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா. செந்திலிடம் பொதுமக்கள் ஒன்றிணைந்து பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து தலைமையில் கோரிக்கை மனு வைக்கப்பட்டது மாவட்டச் செயலாளரின் பரிந்துரையின் பெயரில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் சுமன். தாசில்தார் சிவக்குமார் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர் இன்னும் 10-நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Next Story