இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
X
பிஜேபி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பிஜேபி அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்தும் சுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் 7/ 9 /2024 தேதி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் விலைவாசி உயர்வின் தாக்கத்தை பற்றியும் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்தும் உரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால் மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வன் நகர செயலாளர் கல்யாணி ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பாரிமன்னன், தனராசு, அமுதா, சின்னதுரை, பரமேஸ்வரன், தங்கவேல், திருநாவுக்கரசு, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்
Next Story