தலைமுறைவாக இருந்த நான்கு பேர் கேரளாவில் கைது

தலைமுறைவாக இருந்த நான்கு பேர் கேரளாவில் கைது
X
சின்னாளப்பட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 4 வருடங்களாக தலைமறைவாக இருந்த 4 பேர் கேரளாவில் கைது
திண்டுக்கல் சின்னாளபட்டியில் கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் சின்னாளப்பட்டி போலீசார் சிக்கனம்பட்டியை சேர்ந்த ராஜா, மனைவி பஞ்சவர்ணம், மகன் ராஜகுரு, மருமகன் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த 4 பேரும் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் நீதிமன்றம் அவர்களுக்கு பிடியாணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து புறநகர் DSP.சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் DSP. தனிப்படையினர் SSI. தர்மா காவலர்கள் மணி, காளீஸ்வரன், விமல்ராஜ், அழகர்சாமி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு கேரளாவில் தலைமறைவாக பதுங்கியிருந்த 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்
Next Story