கடாமானை வேட்டையாடி கறித்துண்டுகளாக வெட்டிய ஒருவர் கைது

கடாமானை வேட்டையாடி கறித்துண்டுகளாக வெட்டிய ஒருவர் கைது
X
ஆத்தூர் அணை பகுதியில் கடாமானை வேட்டையாடி கறித்துண்டுகளாக வெட்டிய ஒருவர் கைது, துப்பாக்கியுடன் முக்கிய குற்றவாளி தப்பி ஓட்டம்
திண்டுக்கல் கன்னிவாடி வனத்துறையினர் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காமராஜர் அணை பகுதி அருகே தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சிலர் துப்பாக்கியால் பெண் கடாமானை வேட்டையாடி கறித்துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்தனர். வனத்துறையினரை கண்ட திண்டுக்கல் வெள்ளோடு பகுதியை சேர்ந்த ஆல்வின் எடிசன் என்பவர் துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டார் வனத்துறையினர் ஆத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஆல்வின் எடிசன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story