எடப்பாடி அருகே செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

எடப்பாடி அருகே செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
X
எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் முனியப்பன் கோயில் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்தல்
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செம்மண் கடத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் மோலானி முனியப்பன் கோயில் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ரகசியம் தகவலின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆலச்சம்பாளையம் பகுதிக்கு நேற்று இரவு 8.30 மணிக்கு சென்றனர் அங்கு டிப்பர் லாரியில் செம்மண் அள்ளிக் கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அனுமதி இன்றி செம்மண் அள்ளுவது தெரிவததை தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று மண் அள்ளி இடம் மற்றும் அதற்கு பயன்படுத்திய டிப்பர் லாரி யாருடையது என வட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.
Next Story