அரசு நேரடி‌ நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

அரசு நேரடி‌ நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அரசு நேரடி‌ நெல் கொள்முதல் நிலையத்தினை திறந்து வைத்தார்

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் திறப்பு;


செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பெரியகாட்டுப்பாக்கம் கிராமத்தில் வேளாண் பெருங்குடி மக்களின் நீண்ட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் ஆணையின்படி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசு நேரடி‌ நெல் கொள்முதல் நிலையத்தினை செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்களின் தலைமையில், திருக்கழுக்குன்றம் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.டி.அரசு அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தனர். உடன் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story