புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை

புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை
X
புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே உள்ள சீனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மாரியம்மாள் (21). இந்த தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், தம்பதியினருக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மாரியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற நாகுடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் மாரியம்மாளின் உடலை கைப்பற்றி, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால் அறந்தாங்கி ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story