உடுமலையில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சிறுவர் சிறுமியர் நடனமாடி அசத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட ராமசாமிநகர் , ஆறுமுக நகர், செந்தூர் கார்டன் ,கிரின் பார்க் லேஅவுட் உட்பட பல்வேறு பகுதியில் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். மகாபலி சக்ரவர்த்தி நாட்டு மக்களை காண வரும், திருவோணம் பண்டிகையை கேரள மாநில மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். உடுமலையிலும் வீடுகளின் முன், பூக்களால் அத்தப்பூ கோலம் வரைந்து, தீபம் ஏற்றியும், 21 வகையாக, உணவுகள் தயாரித்து, இலைகளில் பரிமாறி, மகாபலி சக்ரவர்த்திக்கு படைத்தும் வழிபட்டனர்.உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறியும், பாரம்பரிய விளையாட்டுக்கள் ,நடனம் ஆடியும் ஓணம் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
Next Story