மயிலாடுதுறை செம்பனார்கோயில் பகுதியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Mayiladuthurai King 24x7 |15 Sept 2024 12:06 PM GMT
மயிலாடுதுறை செம்பனார்கோவில் பகுதிகளில் பேரறிஞர் அண்ணவின் பிறந்த நாளினை முன்னிட்டு திமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
:- தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் திமுகவினர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு கேணிக்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை பகுதியில் இருந்து திமுக நகர செயலாளர் குண்டா மணி செல்வராஜ் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் பேரணியாக பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர். அங்கே உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளார் நிவேதா முருகன உட்பட திமுக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோன்று திமுகவினர் ஊர்வலமாக சென்று செம்பனார் கோயில் கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Next Story