ஓந்தாம்பட்டியில் செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
Karur King 24x7 |15 Sept 2024 12:53 PM GMT
ஓந்தாம்பட்டியில் செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
ஓந்தாம்பட்டியில் செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி, தென்பாகத்தில் உள்ள ஓந்தாம் பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ஜல விநாயகர் ஸ்ரீ பால விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ எல்லை முனீஸ்வரர் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை மங்கள இசை உடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில், விக்னேஷ்வர பூஜை, தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல், இரண்டாம் கால யாக பூஜை மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு, யாக வேள்வியில் பூஜிக்கபட்ட புனித நீரை, கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story