குடியால் இழந்த காதலை மறக்க தற்கொலை செய்து கொண்ட இளைஞர்

குடியால் இழந்த காதலை மறக்க தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
X
மயிலாடுதுறை அருகே குத்தாலம் சோமசுந்தரம் காலனியை சேர்ந்த பிரபாகர்(33) என்பவர் தொடர்ந்து குடித்து வந்ததால் அவரது காதலி அவரை வெறுத்து ஒதுக்கி விட்டார், பலமுறை முயன்றும் காதலி மறுத்து விட்டதால் வாட்சப்மூலம் செய்தி சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மயிலாடுதுறை அருகே குத்தாலம் சோமசுந்தரம் காலனியை  சேர்ந்தவர் ராமமூர்த்தி  மகன் பிரபாகர்(33) இவருக்கு ஒரு அண்ணன், தம்பி உண்டு பிரபாகர், சென்னையில் உள்ள தனது மாமா கணேசன் என்பவரது மகள் மோனிகாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே பிரபாகர் தொடர் குடிகாராக மாறிவிட்டார், இதை அறிந்த அவரது காதலி, பலமுறை குடியை நிறுத்த பிரபாகரிடம் சொல்லியும், அவர் கேட்கவில்லை, இதனால் மோனிகா தனது காதலை முறித்துக் கொண்டார். காதல் தோல்வியால் தொடர்ந்து குடித்து வந்த பிரபாகர் சம்பவ தினத்தன்று இரவு பத்தரை மணி அளவில் தனது காதலி மோனிக்காவிடும் வாட்ஸ் அப் மூலம் பேசி எனக்கு வாழ பிடிக்கவில்லை நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என பேசிவிட்டு வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பிரபாகரனின் அம்மா படுத்திருக்கும்  அறையில் தூங்க சென்றுள்ளார்.  காலையில் எழுந்து பார்த்த பொழுது பிரபாகர் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது. வாட்ஸ் அப்பில் மோனிகாவிடம் பேசிய தகவல் காலையில் தன் உறவினர்களுக்கு சொல்லியுள்ளார்,  அதற்குள் பிரபாகர் உயிர் பிரிந்திருந்தது தெரியவந்தது. பிரபாகரனின் அண்ணன் கதிரவன்(38) அளித்த புகாரின்பேரில் குத்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற ரன்.
Next Story