இருசக்கர வாகன விபத்தில் காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர்!
X
Madathukulam King 24x7 |16 Sept 2024 1:42 AM GMT
பொன்னேரி
உடுமலை- பல்லடம் ரோடு பொன்னேரி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்து ஏற்பட்டு காயம் அடைந்துள்ளதை அவ்வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்த்துள்ளார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தொலைபேசி மூலம் அழைத்து தெரிவித்து பின்னர் சிகிச்சைக்காக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் உடுமலைப்பேட்டை அரசு தலைமை மருத்துவரிடம் உடனடியாக விபத்தில் காயம் அடைந்துள்ள நபருக்கு அவசர சிகிச்சை அளிக்குமாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளார். வாகன விபத்தில் காயம் அடைந்த நபரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சரின் மனிதநேயமிக்க செயல் பாராட்டுதலுக்குரியது!
Next Story