வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது

வீடு புகுந்து திருடிய ஆசாமி கைது
X
கைது
திருநாவலுார் அருகே வீடு புகுந்து திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். உளுந்துார்பேட்டை தாலுகா, பெரும்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த 28ம் தேதி கூலி வேலைக்கு சென்று இருந்தார். அப்போது வீரமணியின் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை, ரூபாய் 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையின் பேரில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அமீர் அப்பாஸ், 52; என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மூன்று சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story