அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
X
பயிற்சி
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுவின் நிதி உதவி வாயிலாக ஆசிரியர்களுக்கு ஒரு வாரகால திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.பயிற்சி நிறைவு விழாவில் கல்லுாரி முதல்வர் சேட்டு தலைமை தாங்கினார். சங்கராபுரம் அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சுடர்விழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.துணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர் கேசவன் நன்றி கூறினார்.
Next Story