அதிகாலையில் சாலையின் மைய தடுப்பை தாண்டிய அரசு பேருந்து.

அதிகாலையில் சாலையின் மைய தடுப்பை தாண்டிய அரசு பேருந்து.
X
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
பல்லடம் தாராபுரம் சாலையில் இன்று காலை கோவையிலிருந்து அரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது அதிகாலை 6 மணி அளவில் அந்த பேருந்தின் ஓட்டுனர் தூங்கியது போல் தெரிகிறது.இந்நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் மையத்தில் இருந்த தடுப்பு சுவரில் ஏறி மறுபுற சாலையில் இறங்கியது.இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை அப்படியே நிறுத்தி விட்டனர்.அருகிலிருந்த பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் சென்று பார்ப்பதற்குள் சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுனர் பேருந்தை எதிர்ப்புறமாக அப்படியே ஓட்டி சென்று விட்டார்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அங்குள்ள தனியார் கடை ஒன்றில் பதிவாகியிருந்தது தற்போது வைரலாகி வருகிறது.
Next Story