புஞ்சை தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

புஞ்சை தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
புஞ்சை தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, புஞ்சை தோட்டக்குறிச்சி மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதியில் பகுதியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக கட்சி துவங்கிய 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பவள விழா கொண்டாட கட்சி நிர்வாக முடிவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கரூர் , அரவக்குறிச்சி , கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேற்று இரவு கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தளைவாபாளையம் பேரூர் கழகச் செயலாளர் முரளி ராஜா தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேலைதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் புகலூர் நகர மன்ற தலைவர் நொய்யல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டு, கட்சியின் பவள விழாவை எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என கட்சியினரிடையே எழுச்சி உரை ஆற்றினார்.
Next Story